search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கட்டிடம்"

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட மேலபுலம் ஊராட்சியில் ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து அதே கிராமத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.35.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.

    இதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, சோளிங்கர் எம்.எல்.ஏ முனிரத்தினம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி, ஊராட்சி மன்ற தலைவர் அனிதா நாராயணன், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.க ஒன்றிய பொருளாளர் பிரகாஷ் மற்றும் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடியில் அரசினர் மாணவிகள் விடுதி புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அடிக்கல் நாட்டினார்.

    பரமக்குடி 

    பரமக்குடி பொன்னையாபுரத்தில் தாட்கோ மூலம் ரூ. 2.78 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 850 சதுர மீட்டர் பரப்பளவில் கல்லூரி மாணவிகள் விடுதி புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி நகர்மன்ற தலை வர் சேது.கருணாநிதி, மதுரை கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் பச்சவ டிவு, உதவி பொறியாளர் சிதம்பரம் தானு, நகர்மன்ற உறுப்பினர் மாரியம்மாள், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சம்பத், நகர மாணவரணி செயலாளர் மகேந்திரன், வார்டு செயலாளர் அருண்குமார் மற்றும் பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர், வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சூரக்குடி ஊராட்சியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து ைவத்தார்.
    • கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    0சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை, தி.சூரக்குடி ஊராட்சிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், கலையரங்கம், நியாய விலை கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டி டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    பொதுமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பூவான்டிபட்டி கிராமத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை யரங்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-22ன் கீழ் ஆவுடைபொய்கை கிராமத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம்,

    சூரக்குடி கிரா மத்தில் ரூ.14.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள நியாய விலை கடை, நெற்புகப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலை கடை, சூரக்குடி கிராமத்தில் ரூ.06.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாக கட்டிடம் என மொத்தம் ரூ.53.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட் டுள்ள கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவ ராமன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) முத்து மாரியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன். சூரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், கானாடு காத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, காரைக் குடி வட்டாட்சியர் தங்க மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஊர்காவலன், சாக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • புதிய அங்காடி கட்டிடத்தை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி பால்பண்ணைச் சேரியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022-23 நிதியின் கீழ், ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி கட்டிடத்தை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செந்தில் குமார், வி.சி.க. நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் அருட்செல்வன், நகரச் செயாளர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட மாங்கரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    அதனை ஏற்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.11.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அங்கன்வாடி கட்டிடத்தை குழந்தைகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இதில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆல்பர்ட் ஜெனில், முன்னாள் கிள்ளியூர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிளைமெண்ட் பிரேம்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி குழந்தைகள், பெற்றோர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கருவந்தா ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • விழாவில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    தென்காசி:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவந்தா ஊராட்சியில் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    ஊராட்சி தலைவர் தானியேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் மங்களம், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுடலைகண்ணன், அமிர்தம் ஜெயபாலன், மல்லிகா, பேச்சியம்மாள், மாரி செல்வி, மெர்லின், சத்யா பெரியசாமி, ஊராட்சி செயலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் ஜெய குளோரி, மக்கள் பணியாளர் விஜயராம், ஊராட்சி பணியாளர்கள் மாரியம்மாள் , சூரியமதி ராஜேஸ்வரி, அரசு ஒப்பந்தக்காரர் தானியேல் ஞானராஜா, பால்ராஜ், கருவந்தா மற்றும் ஊர் நாட்டாமைகள், விவே கானந்தா பள்ளி நிர்வாகி பால்ராஜ், தொழிலதிபர் யேசுதாஸன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கருவந்தா ஊராட்சி மன்ற தலைவர் தானியேல் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    • ரூ.31 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களை வெங்கடேசன் எம்.பி. ஆய்வு செய்தார்.
    • பணிகள் விரைவில் முடிவுறும் தருவாயில் உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    என்.ஹெச்.எம். மூலம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட 2 மாடி கட்டிடம் கட்டப்ப ட்டு வருகிறது. இந்த கட்டிட் பணிகளை வெங்கடேசன் எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதத்திற்கு 130 விபத்துகள் நடக்கின்றன. விபத்துக்கு உள்ளானவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்க்க 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. எனவே மரண மடையும் சதவீதமும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க 2 முயற்சிகளை மேற்கொண்டோம்.

    மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நடைபெறும் 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட ஒன்றிய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி னோம். அதன் விளைவாக இப்போது ரூ.100 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் விரைவில் முடிவுறும் தருவாயில் உள்ளது. மேலூர் அரசு மருத்துவ மனையில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்போடு ரூ.31 கோடி மதிப்பீட்டில் 150 படுக்கை கள், நவீனப்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கட்டி டங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட கட்டடப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இத்திட்டங்கள் முழுமை பெறும் போது மேலூர் பகுதியில் விபத்து மற்றும் விபத்து மரணங்கள் பெறு மளவு குறையும். பொது மருத்துவ வசதியும் பெரு மளவு முன்னேறி இருக்கும். மருத்துவத்து றையில் மற்ற பகுதியைவிட முன்னேறிய பகுதியாக முன்னுதார ணமான பகுதியாக மேலூர் மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் முகமது யாசின், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரகுநாதன், மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குனர் வெங்கடாசலம், மேலூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ஜெயந்தி, மேலூர் யூனியன் வைஸ் சேர்மன் பாலகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், தாலுகா செயலாளர் கண்ணன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், நகர்மன்ற உறுப்பினர் சர்மிளா பேகம் அப்துல் சலாம், மற்றும் டாக்டர்கள் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

    • நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வட்டார சுகாதார பொது அலகு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் வட்டார சுகாதார பொது அலகு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது.

    அமைச்சர் திறப்பு

    திறப்பு விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். அமைச்சர் வருகையை யொட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தை சுற்றி பார்த்தார்.

    அப்போது அவருடன் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணிதுணை அமைப்பாளர் மணி கண்டன், ஒன்றிய கவுன்சி லர்கள் சேக் முகமது, சுபாஷ் சந்திரபோஸ், தொழில திபர் மாரித்துரை, நெட்டூர் வட்டார சுகாதார மருத்துவர் டாக்டர் ஆறுமுகம், வட்டார சுகா தார மேற்பார்வையாளர் கங்காதரன், நெட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், கிளைச் செயலாளர் கணேசன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்தது.
    • புதிய கட்டிடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் தாலுகா சாலையில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தேர்தல் பிரிவு, சர்வேயர் பிரிவு, பதிவேடுகள் பாதுகாப்பு பிரிவு, இ-சேவை மையம், தனி வட்டாட்சியர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த பழமை கட்டிடத்தின் மேற்பகுதி சேதம், இட நெருக்கடி, மற்றும் பொது மக்களுக்கு போதுமான இருக்கை வசதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர் இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதை த்தொடர்ந்து பொன்னேரி- திருவொற்றியூர் சாலை வேன்பாக்கத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3.06 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்தது. தற்போது இந்த புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் திறக்க தயார் நிலையில் உள்ளது. ஆனால் இன்னும் திறக்கப்படாமல் பயன்பாட்டிற்கு வராமல் காணப்படுகிறது.

    இதனால் புதிய கட்டிட அலுவலகம் முன்பு புதர் மண்டியும், தனி நபர்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்து கிறார்கள். எனவே பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • கேர்பட்டா பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விளையாடுவதற்கு சரியான மைதான வசதி இல்லை
    • பள்ளி முன்பு கிடக்கும் கம்பி கற்களை அகற்றவேண்டும், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி செல்லும் சாலையில் கேர்பட்டா அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு உள்ள கட்டிட வகுப்பறைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே அவை முற்றிலுமாக இடித்து தள்ளப்பட்டன.

    ஆனாலும் அவை அப்புறப்படுத்தப்படவில்லை. இன்னொருபுறம் கேர்பட்டா பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விளையாடுவதற்கு சரியான மைதான வசதி இல்லை. எனவே குழந்தைகள் நுழைவாயில் அருகே விளையாடுகின்றனர்.

    அங்கு உள்ள பகுதியில் கம்பி-கற்கள் நீட்டிக்கொண்டு உள்ளன. அதில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பள்ளியின் கணினி அறையும் இடிக்கப்பட்டு விட்டது. எனவே குழந்தைகளுக்கு சரியான கணினி பாடங்கள் எடுக்க முடியவில்லை என ஆசிரியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

    எனவே பள்ளி முன்பு கிடக்கும் கம்பி கற்களை அகற்றவேண்டும், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தொடக்க பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி புதிய வகுப்பறை கட்ட ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் அந்த பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது.

    இதனால் பள்ளி கட்டிடத்தை சீரமைத்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் இஷா என்ற மாணவி முதல்- அமைச்சருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி புதிய வகுப்பறை கட்டுவதற்கு ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டது.இதனைதொடர்ந்து தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய குழு தலைவர் பரணி சேகர் தலைமையில் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்த மாணவி இஷா அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உள்பட 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டு தேரூர் பேரூராட்சி புதுகிராமம் 1-வது வார்டில் அங்கன் வாடி கட்டும் பணி நடந்து முடிந்தது. இதையடுத்து அதன் திறப்பு விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    முன்னதாக டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம், வட்டார தலைவர் காலபெருமாள், குமரி கிழக்கு மாவட்ட எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் ஜோயல், தங்கம் நடேசன், தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதா ராணி வின்சென்ட், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பென்னி கிரகாம் மற்றும் தேரூர் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×